தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மதுரை, கோவை, தஞ்சாவூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் சூறாவளியுடன் கூடிய காற்று வீசக்கூடும் எனவும், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளனர்.