தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் நேற்று சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் இன்று தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் இந்த அமைச்சரது வீட்டிலும் இன்று ஐ.டி. ரைய்டு., திடீர் சோதனையால் பரபரப்பு!!!