தமிழகத்தில் இப்போது மழையின் தாக்கம் குறைந்து அக்னி வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் மக்கள் பலரும் வெளியில் வருவதற்கு கூட மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முடிந்த வரை பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்தாலே பாதி வெயிலில் இருந்து தப்பிக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மக்கள் இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என்று நினைத்த நேரத்தில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணீருடன் கதறி அழுகை., அப்படி என்ன நடந்துச்சு.., புகைப்படம் போட்டு அதிர்ச்சி கொடுத்த ரைசா!!
வானிலை அறிக்கையில் வெயில் அதிகமாக தென்பட்டாலும் தமிழகம் மற்றும் புதுவை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் தேனி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.