வங்கக்கடலில் சூறாவளிக்காற்று.., அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை!!

0
வங்கக்கடலில் சூறாவளிக்காற்று.., அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை!!
வங்கக்கடலில் சூறாவளிக்காற்று.., அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை!!

வங்கக்கடலில் சூறாவளி காற்று வீசப்பட உள்ளதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 5 நாளுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை

வடதெற்கு அந்தமான் பகுதியின் மேல் வளிமண்டல சுழற்சி நடைபெறுவதால் வங்க கடலை ஒட்டிய மாநிலங்கான தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதியில் அடுத்த 5 நாளைக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் நேற்று தென்மேற்கு மத்திய வங்கக்கடலில் மையம் கொண்ட காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு வழியாக நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. இதனால் மிதமான வெப்பநிலையுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஐடி ஊழியர்களுக்கு ஷாக்., புதிய ஊழியர் பணியமர்த்தல் நிறுத்திவைப்பு! Cognizant நிறுவனம் அதிரடி!!


வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை சூறாவளி காற்றாக வீசப்பட உள்ளதால் காற்றின் வேகம் படிப்படியாக குறையும். அதுவரை தமிழக கடலோர பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here