தென்மேற்கில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
தென்மேற்கில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள திருப்பூர், நாமக்கல், கருர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் மேலும் தென்மேற்கு கடலோர மாவட்டங்கல் மற்றும் உள்ள மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் நாளை புத்தாண்டு அன்று புதுவை மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் மீதமுள்ள மாவட்டங்களில் வானம் வறண்ட வானிலையாக காட்ச்சியளிக்கப்படும். மேலும் வரும் 2.1.21 அன்று புதுவை மற்றும் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் மீதமுள்ள மாவட்டங்களை வானம் வறண்ட நிலையில் காட்சியளிக்கப்படும். 3.1.21 மற்றும் 4.1.21 அன்று தென் தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழையும் மீதமுள்ள மாவட்டங்களில் வானம் வறண்ட நிலையாக காட்சியளிக்கப்படும்.
மேலும் சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரம் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசும் இருக்கும். மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியசும் மற்றும் குறைந்த பட்சமாக 24 டிகிரி செல்சியசும் இருக்கும்.
சீனாவில் மற்றொரு கொரோனா தடுப்பூசி தயார் – சினோபார்ம் நிறுவனம் அறிவிப்பு!!
மழை பதிவு:
கடந்த 24 மணி நேரத்தில் கொள்ளிடம் நாகப்பட்டினம் மாவட்டம் 9 மிமீ திண்டிவனம் 7 மிமீ மற்றும் செஞ்சி , மரக்காணம் பகுதிகளில் தலா 6 மிமீ விழுப்புரம் மாவட்டம் 7 மிமீ, ஆடுதுறை தஞ்சாவூர் மாவட்டம், செய்யுர் செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் விளாத்திகுளம் தூத்துக்குடி மாவட்டம் தலா 5 மிமீ மேலும் ராமேஸ்வரம், கடலூர்,பாண்டிச்சேரி பகுதிகளில் தலா 4 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் டிசம்பர் 31 முதல் ஜனவரி 1 ம் தேதி வரை குமரிக்கடலில் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை வீசும் என்பதால் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல எச்சரிக்கை விடுத்துள்ளது.