அரசு பஸ்களில் இன்று முதல் அறிமுகமான சூப்பர் சேவை – மகிழ்ச்சியில் வரவேற்கும் பொதுமக்கள்!

0
அரசு பஸ்களில் இன்று முதல் அறிமுகமான சூப்பர் சேவை

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல்களை அனுப்பும் வசதி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இன்று முதல் பார்சல் வசதி:

தமிழகத்தில் ஆங்காங்கே இருக்கும் ஊர்களுக்கு குறைந்த மணி நேரத்தில் செல்வதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக அரசு விரைவு பேருந்துகளை இயக்குகின்றனர். பொதுவாகவே தமிழகத்தின் உற்பத்தியான பிரசித்தி பெற்ற பொருட்களை மற்ற ஊர்களுக்கு அனுப்புவதற்கு பெரிதும் பயன்படுத்துவது லாரி சர்வீஸ் மற்றும் பார்சல் சர்வீஸ் மட்டுமே. இதனை தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்ட பிரசித்தி பெற்ற பொருட்கள் குறைவாக இருந்தால் லாரியில் ஏற்றுமதி செய்யமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல்களை அனுப்பும் வசதி கொண்டு வர உள்ளதாக தெரிவித்த நிலையில், தற்போது இன்று முதல் அந்த சேவை தொடங்கி உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்சல் அனுப்பும் பேருந்துக்கு கட்டணமாக மாத வாடகை மற்றும் தினசரி வாடகை கொடுத்து பயன்படுத்திக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் இந்த திட்டத்தை பெரிதும் வரவேற்று உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here