இந்தியாவில் நேற்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா:
உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் கொரோனாவின் ஆட்டம் கோரத்தாண்டவம் ஆட தொடங்கி தற்போது வரை பரவி வருகிறது. அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2 டோஸ் தடுப்பூசி பூர்த்தி செய்தவர்கள் கட்டாயமாக பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கையின் படி, இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றால் 16,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 53 பேர் இறந்துள்ளனர். இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,42,06,996 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.25 லட்சமாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 19,431 பேர். இதனால் மொத்தமாக கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 4,35,55,041 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.