தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஏற்றத்தாழ்வுகளை கண்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று முக்கிய அத்தியாவிசய பொருள்களாக உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சென்னையில் நேற்றைய விலையை விட முறையே 31 காசுகள் மற்றும் 26 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
சமீபகாலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் படிப்படியாக உயர்ந்து தற்போது உச்சத்தை அடைந்து விட்டது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 100ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்திலும் அந்த நிலையை அடைந்து விட்டது. அதாவது , கோவை ,மதுரை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை சதத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் பொது துறை ஆயில் நிறுவனங்கள் இந்த இன்றியமையாத எரிபொருட்களின் விலையை நிர்ணயம் செய்கிறது. அதன் அடிப்படையில் இன்று சென்னையில் நேற்றைய விலையை விட பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் லிட்டருக்கு 26 காசுகளும் அதிகரித்து உள்ளது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.80க்கும் மற்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.72க்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை ஏற்றம் வாகன ஓட்டிகள் மற்றும் மக்களை மிகுந்த அளவு அச்சுறுத்தி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்