கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்து வருகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை. அதே போல் இன்றும் மீண்டும் இந்த எரிபொருட்கள் உயர்வை கண்டு உள்ளது. அதாவது இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 31 காசுகள் மற்றும் ஒரு லிட்டர் டீசல் 15 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா காலத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 97.69ரூபாய்க்கும், ஒரு டீசல் 91.92ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் கிடுகிடுவென உயர்ந்து தற்போது சதத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றம் ஏழை,எளிய மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் மிகுந்த அதிர்ச்சி மற்றும் வேதனைக்கு ஆளாகி உள்ளது.
இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்களே கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலையை நிர்ணயிக்கின்றனர். அந்த வகையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையை விட முறையே 31 காசுகள் மற்றும் 15 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.06க்கும் மற்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.06க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்