சரசரவென உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை…!விலை வீழ்ச்சியை எதிர்நோக்கி வாகன ஓட்டிகள் !!!

0

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தினமும் நிலைத்தன்மை இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் இதன் விலை உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று  பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்தவித மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

மக்களின் அன்றாட முக்கிய பொருளாக  மாறியுள்ளவை  இந்த பெட்ரோல் மற்றும் டீசல் ஆகும். இதன் விலை தற்போது உச்சத்தை எட்டி  உள்ளது. கடந்த சில நாட்களாக சதத்தை தொடும் நிலையில் இருந்த பெட்ரோல் விலை, நேற்று அது சதத்தை கடந்துவிட்டது. அதாவது நேற்று தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதத்தை அடித்து விட்டது. இந்த விலை நிர்ணயம் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்கிறது. கடந்த ஜனவரி மாதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 57 டாலராக இருந்தது. ஆனால் அது தற்போது மெல்ல குறைந்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 40 டாலராக இருக்கிறது. இருப்பினும் மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இந்த நிலையை அடைந்து உள்ளது.

அந்த வகையில்  இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றம்  இல்லாமல் நேற்றைய விலையிலையே நீடிக்கிறது. அதன்படி  சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.13க்கும் மற்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.72க்கும் விற்கப்படுகிறது. இதன் விலை எப்பொழுது குறையும் என்ற எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகளும் , மக்களும் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here