மக்களுக்கு ஆறுதல் அளித்த டீசல் விலை…!இன்றைய நிலவரம் என்ன!!!

0

பெட்ரோல் மற்றும் டீசல் தினசரி  விலையேற்றத்தை  சந்தித்து  மக்களை  அச்சுறுத்தி வருகிறது. மேலும் அந்த எரிபொருட்கள் கடந்த சில நாட்களாக சதத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையை விட லிட்டருக்கு 25காசுகள் உயர்ந்து உள்ளது. அதே சமயம் டீசல் விலை லிட்டருக்கு 15காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

மக்களின் மிக முக்கிய தேவையாக  விளங்குபவை பெட்ரோல் மற்றும் டீசலின் விலை. ஆனால் இவற்றின் விலை கடுமையாக அதிகரித்து மக்களுக்கு பல இன்னல்களை அளித்து வருகிறது. மேலும் இதற்கென அவர்களின்  வருமானத்தில் ஒரு பகுதி செலவாகி விடுகிறது. மக்கள் பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த தருணத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தாறுமாறாக அதிகரித்து உள்ளதால் அத்தியாவிசய பொருட்களின் விலை அதிகரிக்கும் என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த விலை ஏற்றத்தை கண்டித்து பல்வேறு தரப்பினரும் பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதன் விலை குறைந்தபாடில்லை. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையான ரூ.101.67 லிருந்து 25 காசுகள் அதிகரித்து 101.92ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல ஒரு லிட்டர் டீசல் நேற்றைய விலையான ரூ.94.39 லிருந்து 15 காசுகள் குறைந்து 94.24ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here