தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று (நவ.7) 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை ,திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 19 மாவட்டங்களில் பகுதிகளில் இன்று (நவ.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ரயில் பயணிகள் கவனத்திற்கு.., இந்த பகுதியில் சிறப்பு ரயில்கள் இயக்கம்.., வெளியான அறிவிப்பு!!!