கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை எதிர்பார்த்ததை காட்டிலும் அதிரடியாய் குறைந்து கொண்டே செல்கிறது. மேலும், தாய்மார்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை தான் லாபம் தரும் திட்டமாகவும், பாதுகாப்பான திட்டமாகவும் எண்ணுகின்றனர்.
அதாவது, கடந்த 5 நாட்களில் மட்டுமே தங்கத்தின் விலை 952 ரூபாய் குறைந்துவிட்டது. இதனிடையே கடந்த சனிக்கிழமை மட்டும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37,120 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.மேலும், ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4,640 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
நேற்றைய தங்கத்தின் விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64குறைந்து 37,056 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8 குறைந்து ரூ.4,634 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை மேலும் குறைந்திருப்பதால் தாய்மார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.