சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்த தங்கம் – இன்றைய விலை நிலவரம்!!

0
Gold
Gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்திருந்த நிலையில் இன்று சவரனுக்கு 344 ரூபாய் அதிகரித்து உள்ளதால், பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர். தொடர்ந்து ஏறி வரும் தங்கத்தின் விலை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இன்றைய விலை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 25ம் தேதியில் இருந்து 3 மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக நகை விற்பனை நடைபெறவில்லை. இருப்பினும் சர்வதேச சந்தை மதிப்பு காரணமாக விலை உயர்ந்து கொண்டே சென்றது. தற்போது விற்பனை தொடங்கி உள்ள நிலையில், சுப நிகழ்ச்சிகளும் நடைபெற தொடங்கி உள்ளதால் அதன் தேவை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Gold
Gold

39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை கிராமுக்கு 43 ரூபாய் உயர்ந்து ரூ. 4,674க்கும், ஓரு சவரன் 344 ரூபாய் உயர்ந்து ரூ. 37,392 ஆக உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1.20 ரூபாய் அதிகரித்து ரூ. 53.40 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 53,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here