ஒரு வழியாக குறைந்தது தங்க விலை – பொதுமக்கள் நிம்மதி!!

0
Gold Jewels
Gold Jewels

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வரலாறு காணாத அளவு உச்சத்திற்கு சென்ற தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

இன்றைய விலை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்வதைப் போன்று தங்கத்தின் விலையும் ஒவ்வொரு நாளும் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது. பிற தொழில்களும் நலிவடைந்து விட்டதால் முதலீட்டாளர்கள் கவனம் முழுவதும் தங்கத்தின் மீது சென்றது. இதுதான் விலை உயர்விற்கு முக்கிய காரணம். ஊரடங்கின் ஆரம்ப காலத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற தொடங்கி உள்ளது. இதனால் தங்க நகைகளின் விற்பனை அதிகரித்து உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை – முதல்வர் திட்டவட்டம்!!

இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் 8 ரூபாய் குறைந்து ரூ.5,188 க்கும், ஒரு சவரன் 64 ரூபாய் குறைந்து 41,504 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 72.50 ரூபாயாகவும், ஒரு கிலோ ரூ.72,500 ஆகவும் உள்ளது. ஆனால் வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க தான் வாய்ப்புகள் உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here