கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை மக்கள் மனதில் பால் வார்க்கும் விதமாக இன்று குறைந்துள்ளது.
கிடு கிடு உயர்வு:
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை மக்கள் மத்தியில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கூடி வந்தது. இதற்கு இந்த கொரோனா காலம் தான் காரணம் என்று சொல்லப்பட்டு வந்தது. முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்தது தான் இந்த திடீர் கிடு கிடு உயர்வுக்கு காரணம். தங்கள் பாதுகாப்புக்காக இவ்வாறு செய்து வந்தனர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அதில், உச்சகட்டமாக, சவரனுக்கு 43,000 என்று தங்க விலை நிலவரம் இருந்தது. தற்போது, ஒரு ரெண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது.
இன்றைய விலை நிலவரம்:
இன்றைய தங்கத்தின் விலை சென்னையில் சவரனுக்கு 1832 ரூபாய் குறைந்து 22 கேரட் தங்கம் ரூ.40,104 என்று விலை நிர்ணயிக்கபட்டுள்ளது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 229 ரூபாய் குறைந்து 5,013 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை கணிசமாக குறைத்துள்ளது. 2400 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.