சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,86,364 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்டுகின்றனர். மேலும் 3,660 பேர் இந்நோய்த்தொற்றால் இறப்பை தழுவியுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,86,364 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3,660 இறப்புகள் பதிவாகியுள்ளது. நேற்று மட்டும் இந்நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,59,459 ஆக உள்ளது.
இதனால் மொத்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,75,55,457 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இத்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,18,895 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் 2,48,93,410 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது உள்ள நிலவரப்படி இந்தியாவில் 23,43,152 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 20,57,20,660 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிசோதிக்கப்பட்ட கொரோனா மாதிரிகள் விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், நேற்று வரை இந்தியாவில் 33,90,39,861 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில் நேற்று மட்டும் 20,70,508 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!