7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

0

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 மழைக்கு வாய்ப்பு :

தமிழகத்தில் புரவி புயலுக்கு பின் பகல் நேரத்தில் ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் இரவு வேளைகளில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. தற்போது தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

குமரி கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

சபரிமலையில் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி!!

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்ஸியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்ஸியஸ் ஒட்டியும் இருக்கும். தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 17 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here