இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் இன்று 46 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை புரிந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைகள் வெளியான எதிரொலியாக இன்று பங்குச்சந்தை அதிகபட்ச உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் பொருளாதார வல்லுநர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா பரவலால் வீழ்ச்சி:
கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், அனைத்து தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இயல்பு நிலை பாதிக்கப்பட்டதால் இந்தியாவின் பொருளாதார பங்குச்சந்தை வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களாக பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், பொருளாதாரம் மீண்டு வந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ரிசர்வ் வங்கி நாணய கொள்கை முடிவுகளை வெளியிட்டது. இதன் எதிரொலியாக இன்று பங்குசந்தை மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 336 புள்ளிகள் உயர்ந்து 46,599 புள்ளிகளுடன் உச்சகட்டமாக உயர்ந்துள்ளது. அதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 98 புள்ளிகள் உயர்ந்து 13,666 புள்ளிகளுடன் உள்ளது. இந்த அபாரமான உயர்வால் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.
ரிசர்வ் வாங்கின கணிப்பு:
ஏற்கனவே, ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டின் முடிவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி -9.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. இன்றைய நாணய கொள்கையின் அடிப்படையில் 2021 ஆம் நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி -7.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நுகர்வோர் பணவீக்க அளவு 6.8 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இன்றைய பங்குச்சந்தை விவரங்கள்:
- ஐசிஐசிஐ வங்கி மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் – 0.74 சதவீதம்
- சன் பார்மா பங்கு – 0.64 சதவீதம்
- பார்த்தி ஏர்டெல் பங்கு – 0.04 சதவீதம்
- இந்துஸ்தான் யுனிலிவர் பங்கு – 0.09 சதவீதம்
- எஸ்.பி.ஐ பங்கு – 0.65 சதவீதம்
மேலே, குறிப்பிட்டுள்ள அளவு சதவீதங்களில் நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்துள்ளன.