தமிழகத்தில் நேற்று சற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்து உள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் புதிய உச்சத்திற்கு சென்ற விலை சவரன் 42 ஆயிரத்தை நெருங்கி விட்டது.
இன்றைய விலை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் தொழில்துறையில் ஏற்படும் நஷ்டம், பின்னடைவு மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கி வருகிறது. ஏற்கனவே வருமானம் இன்றி தவிக்கும் மக்கள் இதனால் கவலையில் ஆழ்ந்து உள்ளனர். சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தோரோ தங்க நகைகளின் விலையைக் கேட்டு ஆடிப்போய் உள்ளனர். ஆம், அந்த அளவிற்கு ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் சவரன் 5 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட தங்கம், தற்போது ஒரு கிராம் 5 ஆயிரம் ரூபாயை தாண்டி உள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கு கொரோனா தொற்று உறுதி!!
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் 9 ரூபாய் உயர்ந்து ரூ. 5,208 க்கும், ஒரு சவரன் 72 ரூபாய் அதிகரித்து 41,664 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடந்த 1 மாதத்தில் மட்டும் 3500 ரூபாய்க்கு மேல் தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது. தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் காலங்களில் விலை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.