தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம், நடத்தக்கூடிய போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு 2 ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி வெளியாகியுள்ளது.
தேதி வெளியீடு:
தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போலீஸ் பணிக்கான தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வு, உடற்கூறு தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்களுக்கான தேர்வு. அதற்கான அறிக்கை ஏற்கனவே வெளியாகி, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த தேர்வு எப்போது நடைபெறும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு 2 ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ( தமிழ் மொழி தகுதி தேர்வு + முதன்மை தேர்வு) வருகிற 27.11.2022 அன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
80 கேள்விகளுக்கு தகுதி தேர்வும், 70 கேள்விகளுடன் முதன்மை எழுத்துத் தேர்வும் நடைபெற உள்ளது. தமிழ் தகுதி தேர்வு மற்றும் முதன்மை தேர்வுக்கான கேள்விகள், ஒரே வினா புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.