தமிழக சீருடை பணியாளர் தேர்வு ஒத்திவைப்பு – ஸ்டாலின் கோரிக்கை எதிரொலி!!

0

திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா வேகம் காரணமாக தமிழகத்தில் நடத்தப்படும் சீருடை பணியாளர் தேர்வினை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது அதற்கு ஏற்றார் போல் அந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சீருடை பணியாளர் தேர்வு:

தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினர் தமிழகத்தில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 10ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலில் இருந்து வருகிறது. இருந்தும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு கட்ட தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும் ஆன்லைன் மூலமாகவும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வருகிற 21.04.2021ம் தேதி அன்று இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 

ரசிகர்கள் வெள்ளத்தில் சின்ன கலைவாணரின் இறுதி ஊர்வலம் – விருகம்பாக்கத்தை நோக்கி பயணம்!!

தற்போது இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நடைபெறவுள்ள சீருடை பணியாளர்கள் தேர்வினை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது இவர் கூறியது போல் தமிழக சீருடை குழுமம் நடத்தப்படும் தேர்வினை ஒத்திவைக்கப்படும் என்றும் தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here