கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகளை TNUSRB இப்போது வெளியிட்டுள்ளது.
TNUSRB
தமிழக காவல்துறையில் ஏற்படும் காலி பணியிடங்கள் நிரப்ப, தமிழக அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் உள்ளிட்ட 3, 552 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த தேர்வை 2, 998, 20 பேர் எழுதிய நிலையில் 18,672 பேர் எழுத்து தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இந்த உடற் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் போன்றவை நடைபெற்றது.
ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஓரம் கட்ட வரும் முக்கிய பிரபலம்.., தரமான டிவிஸ்ட் கொடுத்த லியோ படக்குழு!!
தற்போது இந்த தேர்வுகளின் முடிவில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பட்டியலை TNUSRB வெளியிட்டுள்ளது. மேலும் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் கூடிய விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.