தமிழகத்தில் அரசு பேருந்துகள் ஓடாது?? வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு!!

0

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் வரும் 17 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல்:

கொரோனா பரவல் அச்சம் காரணமாக பல மாதங்களாக தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மக்களின் தேவை மற்றும் நிலையினை கருத்தில் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட ஆரம்பித்தன. மக்கள் ஆரம்பத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி வந்தனர். ஆனால், தற்போது அலட்சியமாக தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது இல்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நேற்று தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக போக்குவரத்து ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான 14 வது சம்பள ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். இப்படியாக இருக்க இன்று போக்குவரத்துக்கு கழகங்களுக்கு வேலை நிறுத்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியல்!!

இதற்காக வரும் 11 ஆம் தேதி பல்வேறு அரசியல் கட்சிகள் உட்பட பலரிடமும் ஆதரவு திரட்ட உள்ளனர். அதற்கு பின்பாக, 14 ஆம் தேதி மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும். அப்போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கெடு விதிக்கப்படும் என்றும் அதனை நிறைவேற்ற உறுதி அளிக்காவிட்டால் 17 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here