சார்பதிவாளர் உட்பட 3,000 பணியிடங்கள் ஏப்ரல் மாதம் நிரப்பப்படும் – டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு..!

0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் ஏப்ரல் மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் மூலம் 3000 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அந்த ஆணையத்தின் செயலாளர் நந்தகுமார் தெரிவித்து உள்ளார்.

நிலுவையில் உள்ள தேர்வுக்கான அறிவிப்பு:

டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அவர்கள்  இதுவரை வெளியிடப்படாத அனைத்து தேர்வுக்கான அறிவிப்புகளும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.  அதன்படி, 2020ம் ஆண்டிற்கான தேர்வுக்கால அட்டவணையில் ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணிக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.  எனவே இதற்கான அறிவிப்பும் கூடிய விரைவில் வெளியாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

என்னென்ன பணியிடங்கள்..?

ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ள குரூப் 2 தேர்வுகள் குறித்த அறிவிப்பில் நகராட்சி ஆணையர், சார்பதிவாளர், துணை வணிகவரி அலுவலகர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் போன்ற பணியிடங்களும் குரூப் 2A தேர்வின் மூலம் பல்வேறு துறைகளின் நேர்முக உதவியாளர், உதவியாளர் போன்ற பணியிடங்கள் நிரப்படவுள்ளன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here