மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட நேர்முக தேர்வர்கள் லிஸ்ட் ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி..!

0

தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்திய மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முக தேர்வு பட்டியலை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி 2018ம் ஆண்டு வெளியிட்ட 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்கு 2,716 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 785 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மீதம் உள்ளவர்களுக்கு தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் பணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

விதிகளின் படி ஒரு பணிக்கு இரு நபர்களை நேர்முக தேர்வுக்கு அழைத்திருக்க வேண்டும் ஆனால் 33 பேர்கள் மட்டுமே நேர்முக தேர்விற்காக அழைக்கப்பட்டிருந்தனர். இதை எதிர்த்து செந்தில்நாதன் உள்ளிட்ட விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தகுதி நீக்கம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களைப் போல, நேர்முகத்தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை எனவே 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அது மட்டுமில்லாமல் புதிய விதிகளின்படி, எழுத்து தேர்வில் பங்கேற்ற 1,328 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டுமென மோட்டார் வாகன பராமரிப்பு துறைக்கு உத்தரவிட்டார். இந்த பணிகளை நான்கு வாரங்களில் முடித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதையடுத்து, புதிய விதிகளை வகுப்பதாகவும், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடத்தப்படும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here