தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4, காலி பணியிடங்களை உயர்த்தி அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
TNPSC Group 4
தமிழக அரசின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 7,301 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக TNPSC குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில் லட்சக்கணக்கான தேர்வர்கள் கலந்து கொண்ட நிலையில் தேர்வுகள் முடிவுகள் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறன. இந்நிலையில் தேர்வர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
அதாவது கடந்த சில வருடங்களாக உலகை ஆட்டிப் படைத்து வந்த கொரோனாவால் தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. இதனால் பல தேர்வர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு தேர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் குறைவான கலிப்பாணியிடங்களே அறிவித்தனர்.
இதனால் இந்த ஆண்டு குரூப் 4, தேர்வுக்கான காலி பணியிடங்களை உயர்த்தி அதிகரிக்க வேண்டும் என தேர்வாணையத்திடம் முறையிட்டுள்ளனர். இதன் மூலம் பல மாணவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.