TNPSC Group 4 தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக தேர்வர்கள் TNPSC அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
TNPSC
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற TNPSC Group 4 தேர்வுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 23 ஆம் தேதி வெளியானது. ஆனால் இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கருவூல அதிகரிகாரிகள் TNPSC வினாத்தாளை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தேர்வர்கள் இன்று TNPSC அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகளிருக்கு மட்டுமல்ல, இவர்களுக்கும் இனி இலவச பேருந்து பயணம்.., முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
அதாவது இவர்கள் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முறையாக மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை. மேலும் எங்களது தேர்வுத்தாளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே இதை சரி வர விசாரிக்க வேண்டும் என தேர்வர்கள் முற்றுகை போராட்டம் செய்து வருகின்றனர்.