தமிழக தேர்வாணையம் சார்பில் வருடா வருடம் பல்வேறு போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு பதவிகளை வாங்க வேண்டும் என்ற லட்சியத்தில் பலரும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் கூட TNPSC குரூப் 4, குரூப் 1 தேர்வுகள் நடைபெற்று அதற்கான முடிவுகள் வெளியானது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்வாணையத்திற்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது அரசு துறைகளில் அதிகமான பணியிடங்கள் தற்போது வரை நிரப்பப்படாமல் உள்ளது. இருந்தபோதிலும் தேர்வாணை ஆண்டுக்கு 10,000 பணியிடங்களை மட்டும் தான் அறிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு பேருந்துகளில் ரூ.2,000 நோட்டு செல்லுமா? செல்லாதா? வெளியான அதிரடி உத்தரவு!!!
இதனால் TNPSC தேர்வாணையம் சார்பில் வருடத்திற்கு 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இனிமேலாவது இளைஞர்களின் நலன் கருதி அரசு பணியில் உள்ள காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.