தமிழகத்தில் அரசு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் சாலை ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று காலை மாலை என இரு வேளைகளிலும் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரிகளில் தேர்வர்கள் சிலர் மதிய வேளை தேர்வெழுத சிறிது தாமதமாக வந்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
குறிப்பிட்ட நேரத்தில் இந்த கல்லூரியின் இரும்பு கேட் மூடப்பட்டதால் தாமதமாக வந்த தேர்வர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு கட்டத்தில் இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு தேர்வு மையத்திற்குள் சென்று தேர்வெழுதினர். இருந்தாலும் கேட் உடைக்கப்பட்ட காரணத்தால் கல்லூரி நிர்வாகம் காஞ்சிபுரம் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்., இதுல தான் விண்ணப்பிக்கணும்??
விரைந்து வந்த போலீசார் சிசிடிவி உதவியுடன் 6 பெண்கள் உட்பட 60 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.