அதிரடியாக மாற்றப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வு மையங்கள் – அவசர அறிவிப்பால் குழப்பத்தில் தேர்வர்கள்!!

0
அதிரடியாக மாற்றப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வு மையங்கள் - அவசர அறிவிப்பால் குழப்பத்தில் தேர்வர்கள்!!
அதிரடியாக மாற்றப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வு மையங்கள் - அவசர அறிவிப்பால் குழப்பத்தில் தேர்வர்கள்!!

தமிழகத்தில் நாளை குரூப்-2, முதல் நிலை போட்டிக்கான  தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், தர்மபுரி மாவட்ட தேர்வு மையம் மாற்றம் தொடர்பாக அவசர அறிவிப்பு ஒன்றை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

 ஆட்சியர் அறிவிப்பு :

கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக போட்டித்தேர்வு ஏதும் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு (21.05.2022) நாளை முற்பகல் நடைபெற உள்ளது. இதற்காக, தர்மபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 137 தேர்வு மையங்களில் மொத்தம் 37,366 தேர்வர்கள் தேர்வினை எழுத உள்ளனர்.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் தேர்வு மையம் மாற்றம் தொடர்பாக, அவசர அறிவிப்பு ஒன்றை அந்த மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் தேர்வர்களின் ஹால் டிக்கெட்டில், நல்லம்பள்ளி வட்டம், Hall No.039, Govt. Hr. Sec. School, Gooli kottai, Rajakollahalli (P.O), B. Agraharam Viz, Nalampalil Taluk என இடம்பெற்றுள்ள தேர்வு மையத்திற்கு பதிலாக “Govt. Higher Sec. School, B.Agraharam, Pennagaram Main Road” என்பதே தேர்வு மையம் ஆகும். எனவே, Hall No.039.-ல் தேர்வு எழுதும் தேர்வர்கள் ” Govt. Higher Sec. School, B.Agraharam, Pennagaram Main Road” என்ற தேர்வு மையத்திற்கு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் வெளியான இந்த அதிரடி அறிவிப்பால், டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here