டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரனுக்கு கொரோனா உறுதி – மருத்துவமனையில் அனுமதி!!

0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் கா. பாலச்சந்திரன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் அவரது மனைவி மற்றும் மகளுக்கும் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் சிகிச்சைக்காக கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் இதுவரை 5,08,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 8,434 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆறுதல் அளிக்கும் தகவலாக 4,53,165 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அரசு அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இன்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கா.பாலச்சந்திரன் மற்றும் அவரது மனைவி, மகள் என மூவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

 

கொரோனா பாதிப்பால் பிரபல நடிகர் உயிரிழப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்!!

கடந்த ஏப்ரல் மாதம் டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆக நியமிக்கப்பட்ட பாலச்சந்திரன், அதற்கு முன்னர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளராக பதவி வகித்து வந்தவர். டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பாலச்சந்திரன் பதவிக்கு வந்த பிறகு அதனை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here