TNPSC மூலம் நேரடி நியமனம் செய்யப்படும் உதவியாளர் பணி குறித்து கால்நடை பராமரிப்பு துறை அமைச்சுப்பணி சங்கத்தினர் முக்கிய கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
முக்கிய கோரிக்கைகள்:
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி சார்பில் தேர்வு நடத்தப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் சில மாதங்களுக்கு குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்த நிலையில்,தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நடப்பு ஆண்டில் காலியிட மதிப்பீட்டை மையமாக கொண்டு நேரடி உதவியாளர் பணி நியமனம் செய்வதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கால்நடை பராமரிப்பு துறை அமைச்சுப்பணி அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(07.11.2022) – முழு விவரம் உள்ளே!!
இது குறித்து இந்த சங்கத்தின் சார்பில் தலைவர் த.சங்கர் தலைமையில் மாநில மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, TNPSC மூலம் நேரடி உதவியாளர் பணி நியமனம் செய்வதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று 500க்கும் அதிகமான உறுப்பினர்களுடன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும், தலைமை அலுவலக அமைச்சுப்பணியாளர் நிறுவனப் பிரிவினை மறுசீரமைப்பு செய்ய வேண்டும், கோர்ட் வழக்குகளை சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர், மாநில துணைத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.