டிஎன்பிஎஸ்சி தேர்வு சென்னையில் மட்டும் தான் நடைபெறும் – குரூப் 4 முறைகேடு எதிரொலி..!

0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தொல்லியல் அலுவலர் பணிக்கான தேர்வு சென்னையில் மட்டும் தான் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

குரூப் 4 எதிரொலி..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

தமிழ்நாட்டை உலுக்கிய குரூப் 4 முறைகேட்டினை தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே குரூப் 4 முறைகேடு தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து காவலர் தேர்வு, குரூப் 2, குரூப் 2a தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக அடுக்கடுக்காக புகார்கள் எழுந்தன.

2012 குரூப் 2 தேர்வில் முறைகேடா..? விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி..!

சென்னையில் மட்டும் தான்..!

கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தொல்லியல் அலுவலர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் என அனைத்தும் முடிந்து தேர்வும் நடைபெற உள்ளது.

TNEB இளநிலை உதவியாளர் & மின்கணக்கீட்டாளர் தேர்வு – ஆங்கிலத்தில் நடைபெறுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி..!

இந்நிலையில் இந்த போட்டித் தேர்வு சென்னையில் மட்டும் தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை மற்றும் மதுரை மையங்களில் தேர்வு நடைபெறுவதாக இருந்த மையங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here