தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழக அரசு பணியிடங்களில் 20% இடஒதுக்கீடு தொடர்பாக பிறப்பித்து புதிய மசோதாவின் ஆணைகள் என்ன என்பதை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முன்னுரிமை வழங்கும் திட்டம்:
தமிழகத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது தொடர்பான அவசர சட்ட திருத்தத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த 8 மாதங்களாக பதில் அளிக்காமல் மௌனம் காத்து வந்தார். தமிழ்நாட்டில் தமிழ்வழியில் கல்வி பயின்றோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் அளவுக்கு முன்னுரிமை வழங்கும் திட்டம் தற்போது அமலில் இருந்துவருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால், பட்டப்படிப்பை மட்டும் தமிழில் படித்தால், இந்த 20 சதவீத முன்னுரிமைப் பிரிவில் இடம் பெற்றுவிடலாம் என்று இருந்தது. இதனால் பள்ளிப்படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை அணைத்ததையும் தமிழில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவறி விட வாய்ப்புள்ளது.இந்த நிலையில், இதனை மாற்றியமைக்கும் வகையிலான புதிய சட்டத் திருத்தத்தைத் தமிழக அரசு கொண்டுவந்தது.
அரசு வழங்கிய ஆணைகள்:
அதன்படி, பட்டப்படிப்பை அடிப்படைத் தகுதியாகக் கொண்டுள்ள பணிகளுக்கு, பட்டப்படிப்பை மட்டுமல்லாமல், பத்தாம் வகுப்பையும் மேல்நிலை வகுப்பையும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும். பள்ளிக்கூடச் சான்றிதழ்களில் இது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பைக் கல்வித் தகுதியாகக் கொண்டுள்ள அரசுப் பணிகளுக்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அறிவித்த இந்த சட்ட திருத்தமானது உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
‘இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்’ – முக ஸ்டாலின் ட்வீட்!!
தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கான இந்த இடஒதுக்கீட்டில் வேறு ஏதும் முறைகேடுகள் நடந்து விட கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக உள்ளது. பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புககளை பல கல்லூரிகள் தமிழ்வழியில் வழங்குவது குறிப்பிடத்தக்கது.