மின் இணைப்புடன் ஆதாரை, இணைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில் குறிப்பிட்ட சில பயனர்களின் தகவல்கள் இணையத்தின் சர்வர் பிரச்சனையால் அழிந்து போனதாக தகவல் கிடைத்துள்ளது.
வெளியான தகவல்:
தமிழகத்தில், கடந்த நவம்பர் மாதம் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டது. இதுவரை, 1.96 லட்சம் பயனர்கள் இந்த இணைப்பை முடித்துள்ளனர். மீதமுள்ள, 70 லட்சம் பேர் மார்ச் 31 க்குள் இதை முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயனர்களுக்கு ஷாக் அளிக்கும் விதமாக மின்வாரிய அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, கடந்த டிசம்பர் 4 முதல் 12 ஆம் தேதி வரை ஆன்லைனில் இந்த இணைப்பை செய்தவர்களின் விவரங்கள் சர்வர் பிரச்சனையால் அழிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்கள், இந்த இணைப்பை செய்து முடித்ததாக குறுந்தகவல் வந்தாலும், அவர்களின் தகவல்கள் டெலிட் ஆகி விட்டதாக சொல்லப்படுகிறது.
மாஸ்டர் உங்களுக்கும் எனக்குமான உறவு இதான்., இது எதுவும் தப்பில்ல! ரகசியத்தை உடைத்த ரக்ஷிதா!!
மிகக் குறைந்த அளவிலான நபர்களின் தகவல்கள் மட்டுமே அழிந்துள்ளதாகவும், அவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு விரைவில் இதை செய்து முடிக்க வேண்டும் என வலியுறுத்த பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு சில பயனர்கள் மீண்டும் இந்த தங்கள் ஆதார் இணைப்பை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.