மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு., இதை செக் பண்ணிட்டீங்களா? மின்வாரியம் கடைசி வார்னிங்!!

0
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு., இதை செக் பண்ணிட்டீங்களா? மின்வாரியம் கடைசி வார்னிங்!!
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு., இதை செக் பண்ணிட்டீங்களா? மின்வாரியம் கடைசி வார்னிங்!!

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இந்த இணைப்பை சரியாக செய்து முடித்து விட்டீர்களா? என்பதை சரிபார்க்க முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெளியான அறிவிப்பு :

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, கடந்த அக்டோபர் மாதம் அரசு அறிவித்தது. இதற்கான காலக்கெடு, டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், இதை மேலும் நீடித்து ஜனவரி 31 ம் தேதி வரை இந்த இணைப்பை செய்யலாம் என மின்வாரியம் அறிவித்திருந்தது. தற்போது இதற்கான காலக்கெடு இன்னும் 2 நாட்களுக்குள் நிறைவடைய உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், இதுவரை இந்த இணைப்பை செய்யாதவர்கள் விரைந்து இதனை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அப்படி இதை செய்து முடிக்கவில்லை என்றால் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மின்சார கட்டணத்தை செலுத்த முடியாது என மின்வாரியம் எச்சரித்திருந்தது.

10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Exam Result தேதி அறிவிப்பு! கல்வித்துறை அதிரடி!!

இந்த நிலையில் தற்போது இந்த இணைப்பை முடித்த பயனர்கள், கடைசியாக மின்வாரிய இணையதளத்தில் சென்று மின் இணைப்பு எண் மற்றும் செல்போன் நம்பரை கொடுத்து, இந்த இணைப்பு செய்யப்பட்டுள்ளதா? என்பதை சரி பார்த்துக் கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here