தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம், மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் ஆதார் எண்ணுடன், மின் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி தமிழகத்தில் உள்ள 2 கோடியே 60 லட்சம் மின் பயனீட்டாளர்கள் ஆதார் எண்ணுடன் மின் எண்ணை இணைத்துள்ளனர். ஆனால் இதற்கான கால அவகாசம் முடிந்தும் இன்னும் 67 ஆயிரம் பேர் ஆதார் எண்ணுடன் இணைக்காமல் உள்ளனர். இதனால் மின் துறை அதிகாரிகள் இவர்களின் வீடுகளுக்கே சென்று மின் எண்ணை இணைக்காததற்கான காரணத்தை கண்டறிந்து ஆதார் எண்ணுடன் இணைக்க வலியுறுத்தி வருகின்றன.
தமிழகத்தில் தடையில்லாத மின்சாரத்தினால் ஏற்பட்ட நிலை., அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!!
இதுகுறித்து மின் துறை அதிகாரி கூறியதாவது வெளிநாட்டில் உள்ளவர்கள், வாடகை வீட்டில் இருப்போர் தான் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களிடம் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.