தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!!!

0

தமிழகத்தில், இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், அபராதம் இன்றி, மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்குமாறு, மின் வாரியத்தற்கு, நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் படி; தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மே 31ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது தமிழக அரசு.

கால அவகாசம் நீட்டிப்பு:

தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடுகளில், மின் பயன்பாடு கணக்கெடுத்த, 20 தினங்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் வினியோகம் துண்டிக்கப்படும். பின், அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்தியதும், மின்சாரம் வழங்கப்படும். தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால், பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால், வைரஸ் பரவலை தடுக்க, அரசு இன்று முதல், 24ம் தேதி வரை, முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல அனுமதிக்க பட மாட்டாது. எனவே அபராதம் இன்றி, மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்குமாறு, மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த  கோரிக்கை படி; தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் மின் கட்டணம், இதர நிலுவைத்தொகை செலுத்த மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here