
தமிழகம் முழுவதும் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கும் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் முதலமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதாவது கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு கோரி விண்ணப்பித்தவர்களின் ஒரு சிலரின் விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் உள்ளது. மேலும் இந்த பரிசீலனை அனைத்தும் முடிந்தவுடன் அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு டிசம்பர் மாதம் முதல் வங்கி கணக்கில் ரூ.1000 உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.