தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இத்துடன் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் உஷாராக இருக்க வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மக்களே உஷார்…, மீண்டும் பரவ தொடங்கும் நீபா வைரஸ்?? சுகாதாரத் துறை கடும் எச்சரிக்கை!!