தற்போது இந்தியாவில் நடக்கும் விஜய் ஹசாரே தொடரில் இன்றைய போட்டியில் தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேச அணிகள் விளையாடுகின்றனர். இதில் முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேச அணி 225 ரன்னுக்கு ஆட்டமிழந்துள்ளது.
தமிழ்நாடு vs மத்திய பிரதேஷ்:
இந்தியாவில் கொரோனா காலத்திற்கு பின்பு உள்ளூர் போட்டிகளை நடத்தி வருகின்றனர். இதில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேஷ் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. முதல் போட்டியில் வென்று இரண்டாவது போட்டியில் தமிழ்நாடு அணி பரிதாபமாக தோற்றது. எனவே இந்த போட்டி தமிழ்நாடு அணிக்கு முக்கியமானதாக இருக்கும். தற்போது இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
#INDvsENG பகலிரவு டெஸ்ட் – உத்தேச 11 அணி வீரர்கள் விபரம்!!
இந்த போட்டியில் தமிழ்நாடு அணியின் பந்துவீச்சு மிக சிறப்பாக இருந்தது. மத்திய பிரதேச அணியில் உள்ள முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். இதில் அதிகபட்சமாக ஆதித்யா 46 மற்றும் சஹானி 46 ரன்களை குவித்தனர். தமிழ்நாடு அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முகமத் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். தற்போது மத்திய பிரதேச அணி 48.2 ஓவர்கள் முடிவில் 225 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. மேலும் தமிழ்நாடு அணி 226 ரன்கள் அடித்தால் வெற்றி பெரும் என்ற நிலையில் அடுத்ததாக களமிறங்க உள்ளது.