தமிழகத்தில், வேலையில்லா இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது. அது குறித்த விவரங்கள் பின்வருமாறு,
வேலைவாய்ப்பு முகாம் :
தமிழகத்தில் படித்த வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு பணியில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை, அரசு நடத்தி வருகிறது. எவ்வளவுதான் முயற்சிகள் எடுத்தாலும், வேலையில்லா திண்டாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழகம் தோறும் முக்கிய இடங்களில் அரசு மற்றும் தனியார் அமைப்பு மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 20 ஆம் தேதியான நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் வாகன தயாரிப்பின் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
தமிழக மக்களே உஷார்.., அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் கனமழை.., வானிலை மையம் அறிக்கை!!
காலை 9 மணி முதல் மாலை வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொறியியல், டிப்ளமோ, ஐடிஐ மற்றும் டிகிரி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தகுந்த சான்றிதழுடன் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.