தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தெற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வினால் இன்று சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. தற்போது இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனும், நகரின் முக்கிய இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் பகுதி, மத்திய வடமேற்கு வங்கக் கடல் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.