தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…, மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

தமிழகத்தில் தொடர்ந்து மாறி வரும் வானிலை மற்றும் பருவ நிலை காரணமாக, ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் உள் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் இன்று (ஜூன் 1) மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மயூவால் வீட்டுக்குள் வெடித்த பூகம்பம்.., ஈஸ்வரி சொன்ன அந்த வார்த்தை.., கடுப்பில் ராதிகா செஞ்ச காரியம்!!!

மேலும், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்று(ஜூன் 1) மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here