தமிழகத்தில், டெட் தேர்வர்களுக்கான 2ம் தாள் கணினி வழி ஆன்லைன் தேர்வு, எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தேர்வு வாரியம் தகவல்:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தகுதி வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்கள், கலந்தாய்வின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்படுகின்றனர்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான டெட் தேர்வு இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக, கணினி மூலம் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. இந்த டெட் தேர்வின் முதல் தாள் கடந்த அக்டோபர் 14 முதல் 19 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த நிலையில், இந்த டெட் தேர்வின் 2ம் தாளுக்கு 4 லட்சத்து 1,886 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் – கல்வித்துறை எடுத்த திடீர் முடிவு!!
இவர்களுக்கான, இந்த ஆன்லைன் வழி தேர்வை டிசம்பர் மாதம் நடத்த ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான இறுதி, தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும், அதன் அடிப்படையில் 2ம் தாள் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கல்வித்துறை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.