தமிழகத்தில் TN TET தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நியமன ஆணையை உடனே வழங்க கோரி, அரசுக்கு எதிராக திடீர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஆசிரியர்கள் போராட்டம் :
தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கான ஆசிரியர் நியமனத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் கவனித்து வருகிறது. TET தேர்வின் மூலம், பள்ளிகளுக்கான ஆசிரியர் நியமனம் இதுவரை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், TET தேர்வில் தேர்ச்சி பெற்ற, 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திடீரென அரசுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
தங்களுக்கு பணி நியமன ஆணையை விரைந்து வழங்க கோரியும், மறு நியமன போட்டித் தேர்வு விதியை நீக்க கோரியும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு உடனடியாக தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநிலத்தின் அனைத்து அரசு பள்ளிகளையும் மாற்ற முடிவு – கல்வி அமைச்சர் அதிரடி உத்தரவு!!
இதை, முடிக்காமல் காலம் தாழ்த்தினால் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு விரைவில் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இந்த திடீர் போராட்டம் அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.