தமிழக பள்ளி ஆசிரியர்களின் ஓய்வு வயதில் அதிரடி மாற்றம் – கல்வித்துறை வெளியிட்ட முக்கிய சுற்றறிக்கை!!

0
தமிழக பள்ளி ஆசிரியர்களின் ஓய்வு வயதில் அதிரடி மாற்றம் - கல்வித்துறை வெளியிட்ட முக்கிய சுற்றறிக்கை!!

தமிழக பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஓய்வு வயது, உயர்த்தப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றி வரும், ஆசிரியர்களின் பற்றாக்குறையை போக்குவதற்காக, பகுதி நேர ஆசிரியர்கள் அரசின் தொகுப்பூதியத்தில் நியமிக்க படுகிறார்கள். இவர்கள் சமீப தினங்களாக, அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தங்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் வைத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, கல்வித் துறையில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஓய்வு வயது 58லிருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு – கல்வித்துறை அதிகாரப்பூர்வ உத்தரவு!!

இது குறித்து அறிக்கை வெளியிட்ட சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குனர் சுதன், தொகுப்பு புதிய பணியாளர், சிறப்பு மற்றும் பகுதிநேர ஆசிரியர், கல்வி மைய பாதுகாவலர் மற்றும் உதவியாளர் ஆகியோர் ஓய்வு வயது உயர்த்த படுவதாகவும், இதை அனைத்து மாவட்ட கல்வி மையங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here