
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத் தேர்வு, கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் வெளிவந்த நிலையில், மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் ஆன்லைனில் விநியோகிக்கப்பட்டது. இதற்கான முடிவுகளை மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்கள் அன்று (04.09.2023) பிற்பகல் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் பார்த்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.