தமிழகத்தில் விவசாயிகள் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் குறுவை சாகுபடியில் காவிரி நீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து 2022-23 ஆம் ஆண்டுக்கான அரவை பருவத்தில் பதிவு செய்த கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.253.7 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3016.25 கிடைக்க இருப்பதால், 1.45 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விவசாயிகள் உள்ளிட்ட பலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழகத்தில் கார், பைக் வாகனங்கள் வரி நவ.10 முதல் உயர்வு? போக்குவரத்து துறை திடுக்கிடும் அறிவிப்பு!!!